தென்காசி கிழக்கு மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுரண்டையில் மாவட்ட நிர்வாகம் கூட்டம் மாவட்ட செயலாளர் வசந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட அமைப்பாளர் எம்பி.பாகியராஜ்
முன்னிலை வகித்தார் தென்காசி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் மை.வர்கீஸ்,மாநில வணிகர் அணி மாநில துணை செயலாளர் செங்கோட்டை மு.மோசஸ் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினார்கள் கூட்டத்தில் மூன்று
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற கடுமையாக களபணியாற்ற வேண்டும்,
ஆலங்குளம் தாலுகா பகுதியில் புதிதாக மகளீர் கலைக்கல்லூரி திறக்கப்பட்டது.

அந்த மகளிர் கல்லூரிக்கு சமூகநீதி காத்த அன்னை மீனாம்பாள் சிவராஜ் அவர்களின் பெயரை கல்லுரிக்கு சூட்ட வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம்,

சுரண்டை தாட்கோ வணிக வளாக கட்டிடத்தை புதுப்பித்து பட்டியல்கள் மக்கள் பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்று மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் ஆலங்குளம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் இ.வேல்முருகன் ஆலங்குளம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர்,ரெட்டியார் பட்டி அன்பழகன்,
கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்
ப.பாபுவாசன் கீழப்பாவூர் ஒன்றிய பொருளாளர்
இடையர் தவணை சாமி,மகளிர் அணி மாவட்ட பொறுப்பாளர் சுரண்டை செல்வி ஆலங்குளம்
ஒன்றிய அமைப்பாளர் வீராணம் திருக்குமார்,
வீராணம் ஆனந்த கழநீர்குளம் இசக்கி முத்து
சுரண்டை நகர பொருளாளர் கார்த்திக்
சுரண்டை விஜய் மற்றும் ஏராளமான முகாம் பொறுப்பாளர்கள் பெண் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

முடிவில் மாவட்ட நிர்வாகி ஊத்துமலை எம்ஜி. ராஜா
நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *