தென் திருமலை திருப்பதி ஸ்ரீவாரி ஆனந்த நிலையத்தில் தெப்போற்ச வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த ஜடையம்பாளையத் தில் அமைந்துள்ள தென் திருப்பதி ஸ்ரீ வாரி ஆனந்த நிலையத்தில் தெப்போற்சவ வைபம் இன்று சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியை முன்னிட்டு ஸ்ரீ ராமர்,சீதா, லட்சுமணன் ஆஞ்சநேயர் சகிதம் திருவீதி உலா வந்தார். அதைத் தொடர்ந்து ஸ்ரீ ராமர், சீதாதேவி ஆஞ்சநேயர் உடன் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினார்,
வேத விற்பன்னர்கள் மந்திரங்களுடன் மங்கள வாத்தியங்கள் இசைக்க தெப்பத் தேர் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு ஸ்ரீராமர் அருள் பாலித்தார். இந்நிகழ்ச்சியில் அன்னூர் கே . கோவிந்தசாமி நாயுடு குடும்பத்தினர் உட்படஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *