வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெரு மகா மாரியம்மன் ஆலயத்தில் ஆறு நிரந்தர உண்டியல்கள் மூலம் ரூபாய் 10, 85, 631 ரொக்கமும், பொன் இனங்கள் 130 200 கிராம், வெள்ளி இனங்கள் 246 கிராமும்காணிக்கையாக கிடைக்கப்பெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெரு மகா மாரியம்மன் ஆலயத்தில் உள்ள ஆறு நிரந்தர உண்டியல்கள் திறந்து எண்ணிக்கை பணி திருவாரூர் துணை ஆணையர்/உதவி ஆணையர் க. ராமு முன்னிலையில் ஆலய செயல் அலுவலர் ஆ. ரமேஷ் தக்கார் ஆய்வர் க. மும்மூர்த்தி ஆகியோர் மேற்பார்வையில், திருவாரூர் மாவட்ட ஐயப்பா சேவா சமாஜ் சங்கத்தினரும், வலங்கைமான் விடியல் பாராமெடிக்கல் மாணவிகளும் மற்றும் தெருவாசிகளும் எண்ணிக்கை பணியில் ஈடுபட்டனர். ஆறு நிரந்தர உண்டியல்கள் மூலம் ரூபாய் 10, 85,631 ரொக்கமும், பொன் இனங்கள் 130.200 கிராமும், வெள்ளி இனங்கள் 246 கிராமும், பக்தர்களால் அளிக்கப்பட்ட காணிக்கைகள் மூலம் கிடைக்கப்பெற்றது.
ஆலயத்தில் உண்டியல்கள் திறப்புக்கான ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் ஆ. ரமேஷ், தக்கர்/ ஆய்வர் க. மும்மூர்த்தி, அலுவலக மேலாளர் தீ. சீனிவாசன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.