வலங்கைமான் செட்டி தெரு ஸ்ரீ வேம்படி சீதளா தேவி மகா மாரியம்மன் ஆலய பங்குனி பெருந்திருவிழாவும், மறுநாள் ஊஞ்சல் உற்சவமும்நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டி தெரு ஸ்ரீ வேம்படி சீதளா தேவி மகா மாரியம்மன் ஆலயத்தில், வருடம் தோறும் பங்குனி முதல் வாரம்ஞாயிற்றுக்கிழமை பங்குனிபெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டு கடந்த 1-ம் தேதி பூச்சொரிதல் விழாவும், 3-ம் தேதி முதல் காப்பு கட்டுகளும், 10-ம் தேதி இரண்டாம் காப்பு கட்டுதலும், அன்று முதல் தினசரி இரவு அம்மன் பல்வேறு வாகனங்களில் விதி உலா காட்சி நடைபெற்று, கடந்த 17 ஆம் தேதி பங்குனி பெருந் திருவிழாவை முன்னிட்டு காலை 9 மணிக்கு பால்குட ஊர்வலமும், 11- மணி அளவில் சிறப்பு அபிஷேக ஆராதரையும், பகல் 12-மணிக்கு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியும், மாலை 4 மணி அளவில் ஸ்ரீ அம்பாள் வீதி உலா காட்சியும், மாலை ஆறு மணி அளவில் செடில் சுற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
மறுநாள் மஞ்சள் நீர் விளையாட்டு விழாவும், அம்பாள் வீதி உலா காட்சியும் நடைபெற்றது. மறுநாள் 19ஆம் தேதி ஸ்ரீ அம்பாள் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் ஆ. ரமேஷ், தக்கார்/ஆய்வர் க. மும்மூர்த்தி, செட்டி தெரு நிர்வாகிகள்,செட்டித் தெருவாசிகள், ஸ்ரீசீதளா தேவி இளைஞர் நற்பணி மன்றம், மண்டகப்படிதாரர்கள் மற்றும் நகரவாசிகள் சிறப்பாக செய்திருந்தனர்.