மதுரையில் புன்னகை பூக்கள் அறிவுசார் குறையுடைய குழந்தைகள் சிறப்பு பள்ளியில் முதலாம் ஆண்டு விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா நமது பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர் களாக வழக்கறிஞர் சுரேஷ் ,கொடையாளர்களான மனமூத்த தம்பிதியினர் ஜனார்தனன் மற்றும் ஜலஜா, மூத்த மருத்துவர் ராஜேஸ்வரன் , முன்னால் மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ்(ஓய்வு) வருகை தந்து விழாவினை சிறப்பித்தனர்.

கலைநிகழ்ச்சிகளுடன் மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் களால் பரிசுகள் வழங்கப்பட்டு இவ்விழா நிறைவு பெற்றது. இவ்விழாவில் அறக்கட்டளை நிர்வாகிகள் மருத்துவர் பாலகுருசாமி மற்றும் மருத்துவர் அமுதநிலவன் ஆகியோர்
கலந்து கொண்டு முதலாம் ஆண்டு விழாவினை சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *