பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி காவல்துறை சார்பில் கொடி அணி வகுப்பு நடைபெற்றது.
இதில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பங்கேற்பு.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக பாபநாசம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அசோக் தலைமையில் கொடி அணி வகுப்பு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணி மதகடி கடைவீதியிலிருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக அய்யம்பேட்டை அண்ணா சிலை வரை அணி வகுப்பு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் துணை ராணுவத்தினரின் கையில் துப்பாக்கி ஏந்தியபடி நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அணி வகுத்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *