வலையபட்டி மஞ்சமலை அய்யனார் கோவிலில் தேனி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் நாராயணசாமி சுவாமி தரிசனம் செய்தார்

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் வலையபட்டி
ஸ்ரீ மஞ்சமலை அய்யனார் சுவாமி கோவிலில் தேனி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் நாராயணசாமி வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார் அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தவர் தெரிவித்தது அதிமுக என்னும் மாபெரும் இயக்கம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா, ஆகியோரால் கட்டிக்காக்கப்பட்ட இயக்கம் அவர்களை தொடர்ந்து புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும் இந்த தேனி பாராளுமன்றத்துக்கு உட்பட்ட சோழவந்தான் தொகுதியில் எனக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளது நான் வெற்றி பெற்று மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்வேன் என்றும் தெரிவித்தார்.

அவருடன் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அலங்காநல்லூர் அதிமுக ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், நகர செயலாளர்கள் அழகுராஜ், குமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
எஸ்.டி.கே.ஜக்கையன், பார்த்திபன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசன், கருப்பையா, மாணிக்கம், எஸ்.எஸ். சரவணன், மகேந்திரன், அம்மா பேரவை நிர்வாகிகள் இளங்கோவன், வக்கீல்திருப்பதி, வெற்றிவேல், வாடிப்பட்டி ராஜேஷ் கண்ணா, ஒன்றிய செயலாளர்கள் கொரியர்கணேசன், காளிதாஸ், அரியூர் ராதாகிருஷ்ணன், துணை செயலாளர் சம்பத், நகர செயலாளர் டாக்டர் அசோக்குமார், எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள் ஜெயச்சந்திரமணியன், எம்.எஸ்.சுந்தரம், செந்தில்குமார், மாவட்டமகளிர் அணி நிர்வாகி லெட்சுமி மற்றும் அலங்காநல்லூர் நிர்வாகிகள் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கம், வக்கீல்ராஜ்குமார், விவசாய அணி ஆர்.பி. குமார் பாசறை செயலாளர் உமேஷ்சந்தர், தொழிலதிபர் முத்துக்கிருஷ்ணன், பேரூராட்சி கவுன்சிலர் சுந்தர்ராஜன், வார்டு செயலாளர்கள் சுந்தர்ராகவன், பாஸ்கரன், வெள்ளை கிருஷ்ணன், கணேசன், நகர இணைச்செயலாளர் புளியம்மாள், பிரதிநிதி முரளி, கிளை நிர்வாகிகள் ஜெகதீஷ், கே.கே.காமாட்சி, சோனை, மனோகரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *