2024 பாராளுமன்ற தேர்தலில் தேவேந்திர பேனாக்கள் இயக்கம் அதிமுக விற்கு ஆதரவு;-
தென்காசி.
தேவேந்திர பேனாக்கள் இயக்க தலைவர் வழக்கறிஞர் பாலசுந்தரம் சென்னை பசுமை சாலையில் உள்ள வீட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை 20-3-24ல் சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது தாங்கள் எங்கள் தேவேந்திர குல வேளாளர் அரசானை வெளியிடுவதற்கு தகுந்த உதவிகள் செய்ததால் எங்கள் தேவேந்திர பேனாக்கள் இயக்கம் வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக விற்கு முழு ஆதரவு கொடுக்கிறது.
மேலும் கோரிக்கையாக மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் பெயரை தமிழ்நாடு மாவட்ட தலைமை நூலகங்களுக்கு சூட்ட வேண்டும்,தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தின் பட்டியல் மாற்ற கோரிக்கைக்கு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் கூறப்பட்டு ஆதரவு கடிதத்தை எடப்பாடி யாரிடம் தேவேந்திர பேனாக்கள் தலவைர் பாலசுந்தரம் வழங்கினார்.
இச்சந்திப்பின் போது தேவேந்திர பேனாக்கள் இயக்க பொதுச்செயலாளர் சாம்பை பாஸ்கர் ,தலைமை நிலைய செயலாளர் வசந்தகுமார்,தென்காசி மாவட்ட செயலாளர் தங்கராஜ்,திருநெல்வேலி மாவட்ட செயலாளர் கிருஷ்ணன்,ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் மணி மற்றும் இயக்க நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.