வலங்கைமான் அருகே உள்ள தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசு ஆண்டுதோறும் எட்டாம் வகுப்பு படிக்கும் வருவாய் வழி திறனறித் தேர்வை நடத்துகிறது. இதில் வெற்றி பெறும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு நடத்தப்பட்ட தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவி ஜாய்ஸ் பிரின்சி வெற்றி பெற்றார்.

பள்ளியில் மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் ஜான் பிரபா தலைமை வகித்தார். விழாவில் தென் குவள வேலி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பால தண்டாயுதபாணி பரிசும், பதக்கமும் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் கும்பகோணம் ஜோஸ் ஆலுகாஸ் நிறுவன கிளை மேலாளர் ரஞ்சித், பள்ளி ஆசிரியர்கள் ராமமூர்த்தி, விஜயகுமாரி, இளையராஜா, சூரியகுமார், ரேணுகா, சுதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *