பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே மேலவழுத்தூர் ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ சக்திவேல் முருகன் ஆலயம் பால்குடம் மற்றும் ராட்சச ரத காவடி திருவிழா..
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே வேலவழுத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் அருள்மிகு வள்ளி தெய்வானை உடனுறை ஸ்ரீ சக்திவேல் முருகன் ஆலயம் ஆலயத்தின் பால்குடம் மற்றும் ராட்சச ரத காவடி திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. குடமுருட்டி ஆற்றில் இருந்து பெண்கள் உட்பட திரளான பக்தர்கள் பால்குடம் ராட்சச ரத காவடிகளை மாறி மாறி சுமந்தவாறு ஆட்டம் பாட்டங்களுடன், முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து கோவிலை வந்தடைந்தனர். அதனை தொடர்ந்து விநாயகர் மற்றும் வள்ளி தெய்வானை உடனுறை முருகனுக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடைபெற்று மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.