பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே மாகாளிபுரம் முருகப்பெருமான் ஆலயம் 65-ஆம் ஆண்டு பங்குனி உத்திர விழா பக்தர்கள் பால்குடம், அலகுகாவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மாகாளிபுரத்தில் அமைந்துள்ள முருகப்பெருமான் ஆலயத்தின் 65-ஆம் ஆண்டு பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்றது.
அதனையொட்டி குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து மேள தாளங்கள் முழங்க பக்தர்கள் பால்குடம், அலகுகாவடி, எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்து கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் பெண்கள் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் மற்றும் அலகுகாவடி எடுத்து முருகப்பெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.