திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப் பூண்டி தாலுக்கா கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட் டது அய்யநல்லூர் ஊராட்சி இந்த ஊராட்சிக்குட்பட்ட நெ69 அய்ய நல்லூர் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த புகழ் பெற்ற அருள் மிகு ஸ்ரீ காமாட்சி அம்பாள் உடனுறை பசுபதீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் தற்போது பக்தர்கள் நிதி உதவியு டன் பல லட்சம் மதிப்பீட்டு புதுப்பிக் கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனையடுத்து கடந்த இரு தினங்களாக பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் நேற்று காலை 9.10 மணி முதல் 10:30 மணிக்குள்ளாக ஜீரணோதாரணஅஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற் றது. பின்னர் பக்தர்களுக்கு கலசங்கள் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
இதில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி ஜே கோவிந்தராஜன், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நிர்வாகி களான திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் ரவி, மாவட்டத் துணைத் தலைவர் ஜம்புலிங்கம், மாவட்ட செயலாளர் நாகராஜ், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தரவு மேலாண்மை பிரிவு மாவட்டச் செயலாளர் சுசித்ரா, கும்மிடிப்பூண்டி நகர ஒன்றிய தலைவர் நட்ராஜ், கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய தலைவர் அமுல் ராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய் தார்.
இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் ஏ எஸ் ராமச்சந்திரன் ரெட்டி, ரவி, சுசித்ரா, சுரேஷ், மற்றும் கிராம பொது செய்திருந்தனர்.