அய்யம்பேட்டை அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலின், சப்தஸ்தான விழாவை முன்னிட்டு..

கண்ணாடி பல்லக்கில் சுவாமி ஏழு புறப்பாடு 5000-த்திற்க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு..

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே அமைந்துள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலின் இணை கோவிலும். திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலமான சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் திருக்கோவில் சப்தஸ்தான விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 11-ம் நாளில் கண்ணாடி பல்லக்கில் ஏழூர் புறப்பாடு ஊர்வலம் துவங்கியது.

அதனை முன்னிட்டு, அய்யம்பேட்டை சௌராஷ்டிரா சபைக்கு சொந்தமான அழகுமிகு கண்ணாடி பல்லக்கில் அருள்மிகு தேவநாயகி அம்பாள் சமேத சக்கரவாகேஸ்வரர் சுவாமி மலர் அலங்காரத்தில் எழுந்தருள மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, திரு கயிலாய வாத்தியங்கள் முழங்க சப்தஸ்தான உலா நிகழ்ச்சி தொடங்கியது.

தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று துவங்கிய சுவாமி வீதி உலா ஏழு ஊர்களுக்கு சென்று மீண்டும் நாளை பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்று கோவிலை வந்தடைய உள்ளது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சிக்கு உண்டான ஏற்பாடுகளை, சிவத்திரு கயிலாய சிவபூத கண திருக்கூட்டம் சிவனடியார்கள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *