மேட்டுப்பாளையம் நகராட்சி மகாதேவபுரம் பகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நிகழ்வு நடைபெற்றது.
நகராட்சி ஆணையர் இரா.அமுதா அவர்கள் தலைமையில், சுகாதார அலுவலர் திரு அறிவுச் செல்வம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நகராட்சி பணியாளர்கள் , தொழிலாளர்கள்ஆர்வமுடன் கலந்து கொண்டு “அனைவரும் வாக்களிப்போம்” என்ற விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி காட்டூர் இரயில் வே கேட் முதல் நெல்லித் துறை
சாலை இரயில்வே கேட் வரை பேரணியாக வந்து வழிநெடுகிலும் கடைகள், வீடுகள் அனைத்திலும் விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கியும், ஸ்டிக்கர்கள் ஒட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் நகராட்சி பணியாளர்கள் ஜெயராமன்,இராமு ,பிரபு, கணேஷ்,சமூக ஆர்வலர் மணிஆகியோர்
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.