வலையபட்டி மஞ்சமலை அய்யனார் கோவிலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் டிடிவி தினகரன் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ளார் வலையபட்டி ஸ்ரீ மஞ்சமலை அய்யனார் கோவிலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தேனி பாராளுமன்ற தொகுதிக்கு போட்டியிடும் டிடிவி தினகரன், அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டி பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டி இடுவதால் குக்கரை கையில் ஏந்திய படி நிர்வாகிகள் வருகை தந்து இருந்தனர்.
இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில நிர்வாகிகள் மண்டல பொறுப்பாளர் தேர்போகிபாண்டியன், டாக்டர் செந்தில்குமார், மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முருகானந்தம், மதுரை வடக்கு மாவட்ட கழக செயலாளர் மேலூர் சரவணன், சோழவந்தான் தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் கோடீஸ்வரன், மாணவியர் அணி செயலாளர் ஜீவிதா நாச்சியார், மற்றும் தஞ்சைபாலு, ஒன்றிய செயலாளர்கள் ரகு, ஜெயபாண்டி, ராஜன், மதன்,நகரச்செயலாளர்கள் ராஜபிரபு, முருகன், கருணாமூர்த்தி, மற்றும் கூட்டணிக் கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் ஒன்றிய தலைவர்கள் தங்கதுரை, இருளப்பன், ஓபிஎஸ் அணி ஒன்றிய செயலாளர் சேது சீனிவாசன், எம்ஜிஆர் மன்றம் நிர்வாகி அய்யாவு, ஒன்றிய துணைச் செயலாளர் வீரமலை(எ)முனுசாமி, பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் குலமங்கலம் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..