நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்கு சாவடி அலுவலர்களுக்கு நடைபெற்ற பயிற்சி வகுப்பை மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன், நன்னிலம் எம் எல் ஏ தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்மணி நேரில் ஆய்வு செய்தனர்.
இந்தியாவின் 18 ஆவது லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் தமிழகத்துக்கு முதல் கட்டமாக ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்தல் தொடர்பான பல்வேறு முன்னெடுப்பு பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தேர்தலில் பணப்பட்டுவாடா உள்ளிட்டவர்களை கண்காணிக்கும் பொருட்டு பறக்கும் படையினர் அமைக்கப்பட்டுள்ளனர். நாகப்பட்டினம் நாடாளுமன்றம் மற்றும் நன்னிலம் சட்டமன்றத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வாகன சோதனைகள் மேற்கொள்ளும் விதமாக மூன்று பறக்கும் படை குழுவினர் அமைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் எட்டு மணி நேரத்திற்கு ஒருமுறை என சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதி மற்றும் 169. நன்னிலம் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட நன்னிலம், குடவாசல், வலங்கைமான் தாலுகாவை சேர்ந்த 1691 வாக்கு சாவடி அலுவலர்களுக்கான முதல் பயிற்சி வகுப்பு சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
வாக்கு சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பை மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன் மற்றும் நன்னிலம் சட்டமன்றத் தொகுதி உதவி தேர்தல் நடக்கும் அலுவலர் கண்மணி நேரில் ஆய்வு செய்தனர்.
அப்போது நன்னிலம் தாசில்தார் குருமூர்த்தி, குடவாசல் தாசில்தார் தேவகி, வலங்கைமான் தாசில்தார் ரஷ்யா பேகம் மற்றும் வருவாய்த் துறையினர் ஆகியோர் உடன் இருந்தனர்.