திருவாரூரில் அதிமுக வேட்பாளர் ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி மார்ச் 31 நாளை பிரச்சாரம். திரளாக பங்கேற்க முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ அழைப்பு

திருவாரூர், மார்ச்.30- திருவாரூரில் அதிமுக வேட்பாளர் சுர்ஜித்சங்கரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நாளை (31.3.24) பிரச்சாரம் செய்ய உள்ளார். நாளை மாலை 5 மணிக்கு திருவாரூர் தெற்கு வீதியில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற உள்ளது.

கூட்டத்திற்கு கட்சியின் அமைப்புச் செயலாளரும் திருவாரூர் மாவட்டச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ தலைமை வகிக்கிறார். நாகை மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் எம் எல் ஏ முன்னிலை வகிக்கிறார்.

கூட்டத்தில் அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.. இதற்கான ஏற்பாடுகளை திருவாரூர் மாவட்டச் செயலாளர் இரா.காமராஜ் எம்எல்ஏ உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நாகை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சுர்ஜித்சங்கரை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நாளை (31.3.24) மாலை 5 மணிக்கு திருவாரூர் தெற்கு வீதியில் உரையாற்றுகிறார்.

காவிரி டெல்டா மாவட்டங்களின் வாழ்வாதாரமாக விளங்கும் விவசாயத்தை பாதுகாக்கும் வகையில் இப்பகுதியினை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு விவசாயத்தை எடப்பாடி பழனிச்சாமி காப்பாற்றியுள்ளார்.

இப்பகுதியில் உள்ள அனைத்து நீர் நிலைகளையும் தூர்வாரி பாசனத்திற்கும், நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் காரணமாக அமைந்துள்ளார். அது மட்டுமல்ல இப்பகுதியில் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி உள்ளார்.

மேலும் நாடாளுமன்ற தேர்தல் வெற்றியின் மூலம் பல்வேறு புதிய திட்டங்களை வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளார். எனவே திருவாரூர் தெற்கு வீதியில் நடைபெறும் பிரச்சார கூட்டத்திற்கு அனைவரும் திரளாக பங்கேற்று ஆதரவு அளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *