தேனி மாவட்டம் சின்னமனூர் ஒன்றிய பகுதிகளில் தங்க தமிழ்ச்செல்வனுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு

தேனி மாவட்டம் சின்னமனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மார்க்கையன்கோட்டை எல்ல பட்டி ஆகிய பகுதிகளில் இந்திய கூட்டணி கட்சி திமுக வெற்றி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதற்கான ஏற்பாடுகளை மார்க்கையன்கோட்டை பேரூராட்சி மன்ற தலைவரும் திமுக பேரூர் கழக செயலாளருமான ஒ ஏ முருகன் மற்றும் பேரூர் திமுக கிளை கழக நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர். இந்த வாக்கு சேகரிப்பின் போது இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்று திமுக வெற்றி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *