அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள காந்திகிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபட்டாளம்மன்,
முத்துக்கன்னி, கருப்பசாமி, திருக்கோவில் 60-ம்ஆண்டு பங்குனி உற்சவ விழா நடைபெற்றது
முன்னதாக 20-ம் தேதி செவ்வாய்க்கிழமை மேள தாளங்கள் முழங்க புதுப்பட்டி வேளாளர் நாகராஜ் இல்லத்தில் இருந்து சுவாமியை அழைத்து வருதல் முளைப்பாரி ஊர்வலம் வருதல் அம்மனுக்கு கண் திறந்து பல்வேறு அலங்கார பூஜைகள் செய்து பின்னர் வானவேடிக்கையுடன் வீதி உலா வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது 21ம் தேதி புதன்கிழமை அதிகாலை மாவிளக்கு எடுத்தல், அக்னி சட்டி, எடுத்தல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் பின்னர் இன்று காலை 9 மணி அளவில் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் கிடாய் வெட்டப்பட்டது.
22 ஆம் தேதி வியாழக்கிழமை பிற்பகல் மஞ்சள் நீராடுதல் கம்மாய்க்கு சென்று முளைப்பாரி கரைத்தலுடன் திருவிழா நிறைவு பெற்றது. இந்த திருவிழா நிகழ்ச்சியில் உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இவ்விழா ஏற்பாடுகளை காந்திகிராமம் பொதுமக்கள் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் செய்திருந்தனர்..