வேதாரண்யம் செய்தியாளர்: மருதூர் மணி
நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேதாரண்யம் வட்டார கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி பாராளுமன்ற வேட்பாளர் கார்த்திகா வாக்குசேகரிப்பின் போது மேலமருதூர் பெரியாண்டவர் கோவிலில் தரிசனம் செய்தார்.
அவர் பரப்புரையில் பேசும் போது
சிலிக்கேட் கனிம வள கொள்ளை தடுக்கப்படும்!
தென்னை விவசாயிகளுக்கு தென்னை வாரிய கிளை மையம், தென்னை நார் உரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்! முல்லைப்பூ புவிசார் குறியீடு பெறப்படும்! பேரிடர் நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்க படும்!சவுக்கு சாகுபடி செய்ய காப்பீட்டு திட்டம் அறிமுக படுத்த படும். என கூறினார்..