அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள எர்ரம்பட்டி கிராம மந்தையில் அமைந்துள்ள
ஸ்ரீ முத்தாலம்மன்,ஸ்ரீ காளியம்மன், கோவில் பங்குனி உற்சவ விழா நடைபெற்றது.

மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில் முதல் நாள் நிகழ்ச்சியாக நாட்டாமை வீட்டில் இருந்து காப்பு கட்டுதல் அதன் பின்னர் ராஜா ராணி ஆட்டம் நடைபெற்றது அன்று இரவு 10.30 மணியளவில் நாட்டாமை வீட்டில் இருந்து பூ பெட்டி நகைப்பெட்டி மேளதாளம் வான வேடிக்கை முழங்க முத்தாலம்மன் கண் திறந்து சன்னதி வந்தடைதல் நாட்டாமை வீட்டில் இருந்து பூ பெட்டி மேளதாளத்துடன் அருகில் உள்ள சாத்தையார் ஓடையில் ஸ்ரீ காளியம்மன் கரகம் ஜோடித்து வானவேடிக்கை முழங்க 04.04.24.
வியாழக்கிழமை அன்று காலை 7.00 மணிக்குள் சன்னதி வந்து அடைதல் அதன் பின்னர் அறுசுவை அன்னதானமும் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து முளைப்பாரி எடுத்தல், மாவிளக்கு, தீச்சட்டி, பொங்கல் வைத்தல், கிடாய் வெட்டுதல், அழகு குத்துதல், உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அன்று இரவு ஸ்ரீ முத்தாலம்மன் மேளதாளம் முழங்க தேவசேரி கம்மாக்கரை பூஞ்சோலை சென்றடைதல் நிகழ்ச்சியும் மறுநாள் வெள்ளிக்கிழமை மதியம் மஞ்சள் நீராடல் முளைப்பாரி எடுத்து கம்மாக்கரை சென்றடைதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் திருவிழா நிறைவு பெற்றது. இந்த திருவிழாவுக்கான ஏற்பாடுகளை எர்ராம்பட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *