பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன்
வலங்கைமானில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை .செல்வராஜ் ஆதரித்து குடந்தை அரசன், திருமுருகன் காந்தி ஆகியோர் வாக்கு சேகரிப்பு…..
நாகை நாடாளுமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை செல்வராஜ் ஆதரித்து விடுதலை தமிழ் புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் குடந்தை அரசன் மற்றும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
வலங்கைமான் ,குடவாசல் , அச்சிதமங்கலம் ,நன்னிலம், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளர் வை.செல்வராஜ் -க்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் திமுக மற்றும் கூட்டணி கட்சி மாவட்ட நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்
அப்போது விடுதலை தமிழ் புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் குடந்தை அரசன் பேசுகையில் இந்தியக் கூட்டணி வெற்றி என்பது மனிதநேயத்தின் வெற்றி எனவும்,
இந்திய பாராளுமன்ற அரசியல் சட்டத்தை பாதுகாக்கின்ற வெற்றி என்பதையும் அவர் கூறினார்.
தொடர்ந்து மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசுகையில்….
பாண்டிச்சேரி மக்களுக்கு ஒருபோதும் கவர்னராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் ஒரு நல்லதையும் செய்ததில்லை அதனால் தான் தென் சென்னையில் போட்டியிடுகிறார்..
பாண்டிச்சேரியில் நல்லது செய்தால் தானே போட்டியிட முடியும் எனவும் மேலும் தமிழகத்தில் போட்டியிட முடிவு செய்தது வட மாநிலத்தவர்களை குடியேற வைப்பதற்காக தான் மட்டுமே தவிர வெற்றியை காண்பதற்கு அல்ல என அவர் தெரிவித்தார் மேலும் ஒருபோதும் தாமரையை இந்த தேர்தலில் மட்டும் இல்லாமல் எப்பொழுதும் மலர விடமாட்டோம் எனவும் உயிரே போனாலும் தாமரையே தமிழகத்தில் மலர விடமாட்டோம் என அவர் பேசினார்.
இந்த தேர்தல் பிரச்சாரத்தில் திமுக கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்