தென்காசி மாவட்டம் அச்சன்புதூரில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் முன்னாள் திமுக மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் சிவ பத்மநாபன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு உரையாற்றினார்.
இதில் மாவட்டத் துணைச் செயலாளர் மாவட்ட கவுன்சிலர் கனிமொழி, வளைகுடா நாடு திமுக நிர்வாகி சிக்கந்தர் பாபு, முன்னாள் கடையநல்லூர் ஒன்றிய கழக செயலாளர் காசி தர்மம் துரை,
மாவட்ட நற்பணி மன்ற தலைவர் ஈஸ்வரன், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், பெருமாள்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் காளிராஜ், மாவட்ட பிரதிநிதி அன்பழகன் செங்கோட்டை ஒன்றிய நற்பணி மன்ற தலைவர் ஷாஜகான், ஆலங்குளம் வடக்கு ஒன்றிய மன்ற தலைவர் அருணா பாண்டியன், வழக்கறிஞர் அரிகிருஷ்ணன், அமீரகம் ஹசன், மற்றும் வார்டு கழகச் செயலாளர்கள் நிர்வாகிகள் ஜமாத் தலைவர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.