புவனகிரி

கடலூர் மாவட்டம் புவனகிரி ஸ்ரீ அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 6.4.24 சனிக்கிழமை அன்று மாலை யூகேஜி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது .

இதில் பள்ளியின் தாளாளர் ஏசிபி இரத்தினசுப்பிரமணியன் மற்றும் பள்ளியின் இயக்குனர் முத்து குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளியின் முதன்மை கல்வி அலுவலர் செல்வராஜ் சிறப்புரையாற்றினார். தலைமை ஆசிரியை கவிதா வரவேற்புரையாற்றினார். இதில் சிறப்பு விருந்தினராக ஆர்விபி மருத்துவமனை சேர்மேன் மருத்துவர் கதிரவன் கலந்துகொண்டு 90க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி மாணவர்களிடையே சிறப்புரையாற்றி பட்டமளிப்பு விழாவை சிறப்பித்தார்.

மேலும் இதில் மருத்துவர் மங்களேஸ்வரன்
பள்ளியின் அறக்கட்டளை உறுப்பினர்கள் குணசேகர் மற்றும் வனிதா இரத்தின சுப்பிரமணியன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பட்டம் பெற்றதைக் கண்டு பேரானந்தம் அடைந்தனர். முடிவில் ஒருங்கிணைப்பாளர் ரம்யா நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *