கடலூர் மாவட்டம் புவனகிரி ரோட்டரி சங்கம் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி புவனகிரி அருகே உள்ள ஆதிவராகநத்தம் பள்ளி வாசலில் நடைபெற்றது.
முன்னாள் ரோட்டரி சங்க தலைவர் ஹபீப்ரகுமான் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிவாசல் நிர்வாகிகள் அலாவுதீன், அப்துல்ரசாக், அலாவுதீன் முன்னிலை வகித்து இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
இதில் சிறப்பு விருந்தினர்களாக மருத்துவர் கதிரவன் ரோட்டரி தலைவர் சேஷாத்ரி செயலாளர் சுதர்சன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மேலும் இதில் மருத்துவர் மங்களேஷ்வரன் ரோட்டரி உறுப்பினர்கள் முருகவேல் விக்ரமன் கோபிரத்தினம் சதீஷ் மற்றும் ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர்.