கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் ஆர் கே தேவேந்திரன் நாடார் டிரஸ்ட் சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது..
கோவை .கோவை ஆர் எஸ் புரத்தில்.உலக வர்த்தகரும்,கோவை நாடார் சங்கத்தின் முன்னாள் தலைவருமான ஆர் கே .தெய்வேந்திரன் நாடார்அறக்கட்டளை சார்பில், ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ உதவி,தினமும் ஒரு ரூபாய்க்கு மதிய உணவு என பல்வேறு சமூக நலப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக,
கோடை வெயில் தாக்கத்தை தணிக்கஆண்டுதோறும் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு தினமும் ஆயிரம் பேருக்கு நீர் மோர் வழங்கப்பட்டு வருகிறது.இதேபோல ஆர்.கே. தெயவேந்திரன் நாடார் டிரஸ்ட் தலைமை அலுவலகம் முன்பாக நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு அதற்கான திறப்பு விழா நடந்தது.
இதில் தெய்வேந்திர நாடார் அறக்கட்டளை அறங்காவலர்கள் கலைச்செல்வி, தெய்வேந்திரன், ரத்தினமாலா ராஜேஷ் குமார் ,அகிலேஷ் குமார், ஆதித்யா ராஜேஷ் குமார்,ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கி தொடங்கி வைத்தனர்.
இதில் கோவை நாடார் சங்க உறுப்பினர்கள் ஆர் கே .தெயவேந்திரன் நாடார் நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்றும் தேவேந்திரன் நிறுவனங்களின் அலுவலக ஊழியர்கள்,மற்றும் பலர் கலந்து கொண்டனர்.