எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழியில் சின்னம் காசுக்காக ஓட்டு போட்டு எந்த மாற்றமும் ஏற்படவில்லை என நாம் தமிழர் கட்சி மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் காளியம்மாள் பிரச்சாரம். காவிரி நீரை வழங்க மறுக்கும் காங்கிரஸ் கட்சிக்கு தமிழக மக்கள் ஆதரவு என கேள்வி :-
பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது.அனைத்து கட்சி வேட்பாளர்களும் ஏற்கும் மனம் தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக காளியம்மாள் போட்டியிடுகிறார் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பதிவு பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் சீர்காழி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கொள்ளிடம் ஒன்றியத்தில் எருக்கூர், அரசூர், புத்தூர், காப்பியகுடி ,ஓலையாம்புத்தூர் ,கீழ்மாத்தூர் குன்னம் பெரம்பூர் வடரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் கட்சி உறுப்பினர்களுடன் திறந்த வெளி வாகனத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
முன்னதாக பிரச்சாரத் தூங்குவதற்கு முன்பு கட்சித் தோழர்களுடன் சாலையோரத்தில் நாம் தமிழர் கட்சி மயிலாடுதுறை பாராளுமன்ற வேட்பாளர் காளியம்மாள் உணவு அருந்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.