காரைக்கால் மாநில தி.மு.க சார்பில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 52-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அமைந்திருக்கும் ஐயா திருவுருவ சிலைக்கு மாநில கழக அமைப்பாளர் நாஜிம், ML A,M. நாக தியாகராஜன் ML A , மற்றும் வடக்கு தொகுதி திமுக ஒருங்கிணைப்பாளர் T.பிரபு@பிரித்திவிராஜ் அவர்களும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்கள்
இந்த நிகழ்ச்சியில் மாநில கழக நிர்வாகிகள், தொகுதி செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து அணியைச் சேர்ந்த அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் தொகுதி கழக நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்கள்..!