பாபநாசத்தில் வாக்கு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னம் பதிவு செய்யும் பணிகள் தீவிரம்..

வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அனைத்து கட்சி முகவர்கள் முன்னிலையில் துவங்கியது..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை ஒட்டி, வாக்கு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னம் பதிவு செய்யும் பணிகள் முகவர்களின் முன்னிலையில் துவங்கியது. வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு அறையில் இருந்து 301- வாக்கு இயந்திரங்களை, தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டன் முன்னிலையில் எடுக்கப்பட்டு, 26-மண்டல அலுவலர்களிடம் மேஜைகளில் பிரித்து வைக்கப்பட்டு, வேட்பாளர்களின் சின்னங்களை பதிவு செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து 301-வாக்குப்பதிவு இயந்திரங்களில், 18-இயந்திரங்களில் அனைத்துக் கட்சியினர் முன்னிலையில் ஆயிரம் மாதிரி வாக்குகள் செலுத்தி வாக்கு இயந்திரங்கள் சரி பார்க்கப்படும் என தெரிய வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *