நெல்லை பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் இன்று காலை ஆலங்குளம் மற்றும் கடையம் வட்டார பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
தொடர்ந்து அவர் அந்த பகுதியில் பிரச்சாரம் முடித்துவிட்டு இடைகால் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள தனது வாகனத்தில் வந்துள்ளார்.
அப்போது இடைகாலில் சோதனை சாவடியில் இருந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரி முத்துக்குமார் தலைமையிலான குழுவினர் அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த நயினார் நாகேந்திரன் பிரச்சார வாகனம் மற்றும் கட்சி தொண்டர்களின் வாகனங்களை சோதனை செய்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து நெல்லை வந்த ரயிலில் நாலு கோடி பணம் கடத்தலில் அவருக்கு தொடர்பு உள்ளதாக கூறப்பட்ட நிலையில் அவரது வீடு மற்றும் அவரது உதவியாளர்கள் வீடுகளில் சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது .