மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கொக்கூர் மற்றும் பழைய கூடலூருக்கும் இடைப்பட்ட வீரசோழன் ஆற்றுப்பாலம் பகுதியில் சிறுத்தையின் கால் தடம் கிடைத்துள்ளது. தற்போது அப்பகுதியில் கூண்டு வைத்துள்ள வனத்துறையினர், தொடர்ந்து சிறுத்தையை தேடும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் தஞ்சை மாவட்ட எல்லையான பேராவூர் தொடங்குகிறது.