கோவையில் பெண்களுக்கான சர்வதேச மாநாடு மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.
பேரா உமன் ப்ரோடுக்ஷன் கவுன்சில்,
நிர்மலா பெண்கள் கல்லூரி,பேரா த்ரோபால் பெடரேஷன் ஆப் இந்தியா இணைந்து நடத்தும் உலகளாவிய பெண்கள் சமத்துவ பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தல் சர்வதேச மாநாடு நிர்மலா பெண்கள் கல்லூரி வளாகத்தில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 24,25,26ஆம் தேதிகளில் 16 நாடுகளை சேர்ந்த பெண்கள் இதில் கலந்து கொள்ள உள்ளனர். நடைபெற உள்ள சர்வதேச மாநாட்டிற்கான ஏற்பாடுகளை அமைப்பு செயலாளர் (pwpc) திவ்யா சண்முகம்,
சர்வதேச மாநாட்டுக் குழுத் தலைவர் சந்தோஷினி,பேரா த்ரோபால் பெடரேஷன் ஆப் இந்தியா தலைவர் டாக்டர் ஆல்பர்ட் பிரேம் குமார், நிர்மலா கல்லூரி டீன் மல்லிகா மற்றும் விமல் டா ஆகியோர் இணைந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளனர்.