திருவொற்றியூர்மணலி விரைவு சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

திருவொற்றியூர் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது.நாள் ஒன்றுக்கு 13 மில்லியன் லிட்டர் வரவேண்டிய குடிநீர் மில்லியன் லிட்டர் வருகிறது.

தற்போது கோடை காலம் என்பதால் குடிநீர் என்பது மிகவும் அவசியமானது.திருவொற்றியூர் குப்பம் பகுதியில் பொதுமக்கள் வழக்கம்போல் இன்று குடிநீர் பிடிப்பதற்காக தெருக்களில் உள்ள குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றனர்.

அப்போது காலை 7 மணிக்கு வர வேண்டிய குடி தண்ணீர் அரை மணி நேரம் ஆகியும் தண்ணீர் வராமல் இருந்துள்ளது.

இதனால் பொதுமக்கள் அதே பகுதியில் உள்ள
எண்ணூர் விரைவு சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்து வந்த திருவொற்றியூர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்..

ஆனால் பேச்சுவார்த்தையில் பொதுமக்கள் உடன்படாததால் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து தகவல் அறிந்து வந்த மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு, கவுன்சிலர் உமாசரவணன் ஆகியோர் சாலை மறியல் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக லாரி மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்தனர்.

மேலும் குடிநீர் பிரச்சனை உடனடியாக சரி செய்யப்பட்டு தொடர்ந்து குடிநீர் வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர் இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இந்த திடீர் சாலை மறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பெரும் பரபரப்பாக காணப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *