ஆ.மோகன்ராஜ் செய்தியாளர் காரைக்கால் மாவட்டம்
காரைக்கால் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க காவல்துறை சார்பில் “காரை காவலன்” என்ற புதிய புகார் செயலியை அறிமுகம் செய்தனர்.
காரைக்கால் மாவட்டத்தில் ஆன்லைன் புகார்கள், போக்குவரத்து மீறல், குற்றச்செயல் உள்ளிட்ட பல்வேறு வகையான புகார்களை ஆதாரத்துடன் காவல் துறையில் புகார் அளிக்க காவல்துறை சார்பில் “காரை காவலன்” என்ற புதிய புகார் செயலியை இன்று மத்திய அரசின் தேசிய தொழில்நுட்ப கழக கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய செயலியை அறிமுகம் செய்தனர்.
தேசிய தொழில்நுட்ப கழக கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் புதிய செயலியை முதுநிலை கண்காணிப்பாளர் மணீஷ்,தேசிய தொழில்நுட்ப கல்வி இயக்குனர் உஷா நடேசன் துவக்கி வைத்தனர். இந்த செயலி மூலம் பொதுமக்கள் தங்களது புகார்களை அச்சமின்றி தெரிவிக்கலாம் என்றும் பொதுமக்களின் புகார்தாரர் பற்றிய ரகசியம்பாதுகாப்பாக இருக்கும் என காவல்துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர்.