ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் சமத்துவ நாள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி தலைமையில் உறுதிமொழி ஏற்பு :-
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை
சமத்துவ நாள் 14.04.2024 தேதி முன்னிட்டு இன்று 12.04.2024 தேதி
இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்கள் தலைமையில் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளுநர்கள் கலந்துகொண்டு சமத்துவ நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் சரவணன் (தலைமையிடம்)குமார் (CCW), துணைக் காவல் கண்காணிப்பாளர் வெங்கட கிருஷ்ணன் (IUCAW) V.பாரதி நிர்வாக அலுவலர் (கணக்கு) A.நாகராஜன் நிர்வாக அலுவலர் (நிர்வாகம்) மற்றும் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சமத்துவ நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.