கோவை

தமிழ் புத்தாண்டு வருவதையொட்டி பூ மார்கெட்டில் குவிந்த மக்கள் – பூ விற்பனை செய்து பொள்ளாச்சி பாராளுமன்ற வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு…

நாளை தமிழ்புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.புத்தாண்டையொட்டி மக்கள் தங்கள் வீடுகளில் சாமி படங்களுக்கு மாலை அணிவித்து சாமி கும்பிடுவது வழக்கம்.

இதையடுத்து கோவையில் உள்ள பூ மார்க்கெட்டுக்கு சென்று தேவையான பூக்களை மக்கள் வாங்கி வருகின்றனர்.காலை முதல் மக்களின் கூட்டம் அலைமோதி வரும் நிலையில் இங்கு பொள்ளாச்சி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ஈஸ்வர சாமியை ஆதரித்து பல்சமய நல்லுறவு இயக்கத் தலைவர் முகமது ரபி அவர்களது ஆதரவாளர்களுடன் பூக்கடைகளில் அமர்ந்து பூக்களை விற்று நூதனமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்..

தொடர்ந்து பூக்கள் வாங்க வரும் மக்களிடையே உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கும் படி துண்டு பிரசுரங்களை வழங்கி பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
அவருடன் திமுக ஆர் எஸ் புரம் பகுதி செயலாளர் கார்த்திக் செல்வராஜ் தலைமை பொதுக்குழு உறுப்பினர்மகுடபதி பல் சமையல் நல்லுறவு இயக்கு நிர்வாகிகள் அபுதாஹிர் இஸ்மாயில் கோவை தல்கா திமுக நிர்வாகிகள் அ மான் நாசர் ஆகியோர் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *