இந்தியா கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை நாடாளுமன்ற வேட்பாளர் வை.செல்வராஜு ஆதரவாக கதிர் அருவாள் சின்னத்திற்கு வாக்கு கேட்டு சிஐடியு மாவட்ட குழு சார்பாக திருவாரூர் நகரப் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு.

உழைப்பாளிகளின் வெற்றிச் சின்னம் கதிர் அரிவாள் சின்னத்திற்க்கு வாக்களிக்க வேண்டி
திருவாரூர் நேதாஜி சாலையில் உள்ள சிபிஎம் கட்சி அலுவலகத்தில் இருந்து சிஐடியு மாவட்ட குழு சார்பாக பிரச்சார இயக்கம் சனிக்கிழமை காலை துவங்கியது.

பிரச்சாரப் பயணத்தை சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.வீரபாண்டியன் துவக்கி வைத்தார், மாவட்ட தலைவர்
எம்.கே.என்.அனிபா தலைமை வகித்தார்,பிரச்சாரத்தில் மாவட்ட செயலாளர் டி.முருகையன் மாவட்ட பொருளாளர்
இரா.மாலதி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்று நகர பகுதியான நேதாஜி சாலை,பழைய நாகை சாலை, பள்ளிவாசல் பகுதி, பழைய பேருந்து நிலையம்,பேபி திரையரங்கம், மற்றும் பனங்கல் சாலை உள்ள வர்த்தக வியாபாரிகளையும், பொதுமக்களையும் சந்தித்து வாக்கு சேகரித்தனர்.

தொடர்ந்து மாலையில் திருவாரூர் பெரிய கோவில் உள்ள நான்கு வீதிகளில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் வீடு வீடாக மக்களை நேரில் சென்று சந்தித்து வெற்றி வேட்பாளர் வை.செல்வராஜுக்கு கதிர் அருவாள் சின்னத்தில் வாக்களிக்க வேண்டி தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர். சென்ற இடமெல்லாம் மக்கள் முகம் மலர்ச்சியுடன், உற்சாகத்துடன் துண்டறிக்கையை பெற்றுக்கொண்டது.

நாகை மட்டுமல்ல 40-ம் இந்தியா கூட்டணியை வெற்றி பெறும் என நிரூபணம் ஆனது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *