R. கண்ணன் செய்தியாளர் மணப்பாறை.
மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவிலில் குத்து விளக்கு பூஜை நடந்தது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் சித்திரை முதல் நாளான தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு மணப்பாறை ஸ்ரீ வேப்பிலை மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, பரம்பரை அறங்காவலர் ஆர்.வீ.எஸ்.வீர்மணி தலைமையில் சிவாச்சாரியார் ஞானஸ்கந்தன் குருக்கள் வேத மந்திரங்கள் முழங்க இரண்டாயிரத்து 500 சுமங்கலி பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனர்.
சிவசாரியார் மந்திரங்கள் ஓத, பெண்களும் மந்திரங்களை தொடர்ந்து கூறினர். இந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற பெண்களுக்கு விளக்கிற்கு எண்ணெய், திரி, அபிஷேகம் செய்யும் குங்குமம், தேங்காய், பூ, பழம், பத்தி, மந்திரங்கள் அச்சிட்ட புத்தகம் மற்றும் ஒரு சில்வர் பாத்திரம் ஆகியவை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி இந்து சமய அறநிலயத்துறை செயல் அலுவலர் அன்பழகன் மேற்பார்வையில் நடந்தது. ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றுச்சென்றனர்.