செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த செங்காடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி வ/49. இவர் ஶ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் அருகே வடக்குப்பட்டு பகுதியில் புதியதாக கட்டப்பட்டுவரும் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில், இவர் கடந்த 17ம் தேதி ஒரகடம் போலீசில் புகார் ஒன்று அளித்தார். அதில், நான் வளையக்கரனை பகுதியில் புதியாதா அமைய இருக்கும் ‛ஸ்ரீ கேசோவ் இன்டேஸ் ஸ்டோஸ்’ நிறுவனத்தில் மேற்பார்வையாளராக உள்ளேன்.
17ம் தேதி, மதியம் 1:30 மணிக்கு எங்கள் நிறுவனம் அமையயுள்ள இடத்தில் இருந்த போது, வளையக்கரனை ஊராட்சி மன்ற தலைவர் ராஜன், தனது கூட்டாளிகள் 10 க்கும் மேற்பட்டோருடன் வந்து கட்டுமான வேலைகளை நிறுத்துமாறு கூறினார்.
பின்னார் பணம் கேட்டு மிரட்டி, வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கன்னத்தில் என்னை அறைந்தார். பணம் தரவில்லை எனில் வேலை செய்ய முடியாது என கூறி மிட்டிவிட்டு அங்கிருந்து சென்றார்.
எனவே, எங்கள் நிறுவத்தில் அத்துமீறி நுழைந்து, தாக்கி வளையக்காரணை ஊராட்சி மன்ற தலைவர் ராஜன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, புகாரில் தெரிவித்திருந்தார்.
புகாரின் படி ஒரகடம் போலீசார் வளையக்கரணை தி.மு.க., ஊராட்சி மன்ற தலைவர் ராஜனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.