ஒடுகத்தூர் அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை
அணைக்கட்டு ஒடுகத்தூர் அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த பெரிய ஏரியூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜா (44) இவரது மகள் அரசு பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வந்த இவர் பொதுத்தேர்வு எழுதி முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று வீட்டில் உள்ள படுக்கை அறையில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த வேப்பங்குப்பம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கும் பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.