R. கண்ணன் செய்தியாளர் மணப்பாறை
மணப்பாறை அருகே புத்தாநத்தம் காவல் நிலைய வளாகத்தில் வைக்கப்பட்ட தண்ணீரை பருகும் உயிரினங்கள்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெப்ப அலை வீசி வரும் நிலையில் வெயிலின் தாக்கத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் மனிதர்கள் மட்டுமல்லாது விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளும் தவிர்த்து வருகின்றன ஏரிகள், குளங்கள், ஆறுகள், குட்டைகள் வறண்டு காணப்படுவதால் வனவிலங்குகள், பறவைகள் தண்ணீர் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா,புத்தாநத்தம் காவல் நிலைய வளாகத்தில் விலங்குகள், பறவைகள் தனது தாகத்தை தணித்துக் கொள்வதற்காக பிளாஸ்டிக் குடத்தில் தண்ணீர் நிரப்பி காவல் நிலைய வளாகத்தில் வைத்துள்ளனர் இதனால் அப்பகுதியில் வாழும் நாய், குரங்கு, காகம், குருவி உள்ளிட்ட விலங்குகளும் பறவைகளும் அங்கே வைக்கப்பட்டுள்ள நீரை பருகி தங்களது தாகத்தை தணித்துக் கொள்கின்றன இந்த மனிதநேயம் மிக்க செயலை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்
இதேபோல் ஆங்காங்கே விலங்குகள் பறவைகள் நீர் அருந்த ஏதுவாக தண்ணீர் நிரப்பி வைத்தால் தண்ணீர் இன்றி தவிக்கும் பறவைகள் விலங்குகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் எனவும் கருத்து தெரிவிக்கின்றனர்.