கோவை சுகுணாபுரம் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் அன்னை ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவில் விழாவில் தமிழக வெற்றி கழகம் கோவை வடக்கு மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதி சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது..
கோவை சுகுணாபுரம் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் அன்னை ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவில் 21 ஆம் ஆண்டு திருக்கல்யாண உற்சவ திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது
கடந்த 23ஆம் தேதி கணபதி ஹோமம் முகூர்த்த கால் நடுதல் சிறப்பு அலங்கார பூஜைகளுடன் ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சியுடன் விழா நடைபெற்றது இந்நிலையில் சிறப்பு நிகழ்வாக பூ இறைத்தல் நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தமிழக வெற்றி கழகத்தின் கோவை வடக்கு மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதி சார்பாக சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது..
தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை வடக்கு மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதி ஃபைசல் இரும்பு கடை அக்கிம், முகமது அலி ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக வெற்றி கழகத்தின் கோவை வடக்கு மாவட்ட தலைவர் சம்பத்குமார் கலந்துகொண்டு அன்னதானத்தை துவக்கி வைத்தார்
இந்நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார் கௌரவ அழைப்பாளர்களாக J B மசாலா கிவிங்டன், வைத்தீஸ்வரன், இந்தியன் வுட்ஸ் சமூக சேவகர் என். குப்புராஜ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்..நிகழ்ச்சியில் தொண்டாமுத்தூர் தொகுதி ரமேஷ்,செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்…