தூத்துக்குடி வடக்கு ரத வீதியில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோவில் கொடை விழா நடைபெற்று வருகிறது

கோவில் கொடை விழாவின் முக்கிய நாளான இன்று மதியம் 12 மணி அளவில் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது அதன் பின்பு அங்கு உள்ள திருமண மண்டபத்தில் அதிமுக நிர்வாகிகள் திருச்சிற்றம்பலம் மற்றும் டைகர் சிவா ஆகியோர் ஏற்பாட்டின் பேரில் 4000 பேருக்கு அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது

விழாவில் அதிமுக மாவட்ட செயலாளர் சண்முகநாதன் கலந்து கொண்டு அன்னதானத்தை துவக்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் அதிமுக அமைப்பு செயலாளர் சின்னத்துரை மாவட்ட தொழிற்சங்க தலைவர் சுதாகர் மற்றும் அதிமுகவினர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *