சிறப்பு கோடைகால இளம் பசுமை ஆர்வலர் இயற்கை முகாம்
R. கார்த்திகேயன்மாவட்ட துணை நிருபர், விருதுநகர்.
இராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்று வரும் அரசு பள்ளிகளில் பயிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட நூறு மாணவர்கள் கலந்து கொண்ட சிறப்பு கோடைகால இளம் பசுமை ஆர்வலர் இயற்கை முகம் 2024 உண்டு உறைவிட பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் பார்வையிட்டு மாணவர்களிடையே கலந்துரையாடினார்.
மேலும் தன்னார்வ அமைப்புகளுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர், பயிற்சி ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.