“கவிதை புத்தகம் வெளியிட்டு விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிரமணியன் தலைமையில் பேரையூர் கவிஞர் மகாலெட்சுமி அவர்கள் எழுதிய காந்த விழிகள் கவிதை புத்தகத்தை வெளியிட குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், மேக்கப் & நடிகை ப்ரியா பெற்று கொண்டார்கள்.

உடன் ரமேஷ், விருதுநகர் ஜெயலட்சுமி, சமூக சேவகையும், நடிகையுமான மதுரை வனிதா, திருத்தங்கள் ஜோதி, விக்கிரமங்கலம் சுகந்தி, திருநெல்வேலி வித்யா, சாதனா, ஏஞ்சலினா மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, கருங்காலகுடி சந்துரு, தலைவர் மீனா, பிரியா மற்றும் கலைக் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் வாழ்த்துக்கள் கூறினார்கள். அனைவருக்கும் இனிப்புகள், தேனீர் வழங்கப் பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *