காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் FFI ஜீன்ஸ் நிட் பிரைவேட் லிமிடெட் என்னும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஆடைகள் தயாரிக்கும் நிறுவனம் அமைந்துள்ளது.

இந்நிறுவனத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் உட்பட ஆண் தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் வருடம் வருடம் இங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு 1000ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை ஊதிய உயர்வு வழங்குவது வழக்கம்.

இந்த நிலையில் இந்த வருடம் ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் 200ரூபாய் முதல் 300ரூபாய் வரை ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியான தொழிலாளர்கள் பணியை புறக்கணித்து எங்களுக்கு ஆயிரம் ரூபாய் ஊதிய உயர்வு வழங்கினால் தான் வேலைக்கு செல்வோம் என உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அந்நிறுவன வளாகத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *