செங்கோட்டை நகராட்சி பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க புதிய திட்டம் ஆய்வு முன்னாள் சேர்மன் எஸ்.எம்.ரஹீம் தகவல்
தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகராட்சி பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க குண்டாறு அணையின் ஆற்றுப் பகுதியில் புதிய குடிநீர் திட்டத்தை செயல்படுத்த முன்னாள் நகர்மன்ற தலைவர் எஸ்.எம்.ரஹீம் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
செங்கோட்டை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள குண்டாறு அணையின் நீர்வழிப்பாதையான கருப்பசாமி கோவில் பகுதியில் இருந்து செங்கோட்டை நகராட்சி பகுதிக்கு குடிநீர் இணைப்பு அமைக்கும் பணிக்கான சாத்திய கூறுகள் குறித்த ஆய்வினை செங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவரும், தி.மு.க தலைமை பொதுக்குழு உறுப்பினருமான எஸ்.எம்.ரஹீம், செங்கோட்டை நகராட்சி பொறியாளர் முகைதீன் அப்துல் காதர் ஆகியோர் ஆய்வு செய்தனர் அப்போது பிளம்பர் அசன்,கோபால் மணி ஆகியோர் உடன் இருந்தனர்.
இதுபற்றி முன்னாள் செங்கோட்டை நகர மன்ற தலைவரும் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினருமான எஸ் எம் ரஹீம் கூறியதாவது:-
செங்கோட்டை நகராட்சி பகுதியில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் எதிர்வரும் காலங்களில் குடிநீர் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் வகையில் புதிய குடிநீர் திட்டத்தை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி குண்டாறு அணை ஆற்றுப்பகுதியில் இருந்து செங்கோட்டை நகராட்சி பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்ல தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஏற்கனவே திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி இந்தத் திட்டத்தை நிறைவேற்ற தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன், தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன், தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு, மற்றும் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் மூலமாக தமிழக முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்று இந்தத் திட்டத்தை நிறைவற்ற முனைப்புடன் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
.இந்த திட்டத்தை நிறைவேற்றினால் செங்கோட்டை நகராட்சி பகுதியில் குடிநீர் பிரச்சினை முற்றிலுமாக தீர்க்கப்படும் எனவே இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என செங்கோட்டை நகராட்சி பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.