தமிழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவர்கள் 10 ஆயிரத்து 534 பேரும் மாணவிகள் 11, 309 பேரும் மொத்தம் 21 ஆயிரத்து 843 பேர் தேர்வு எழுதினார்கள் இதில் மாணவர்கள் 9645 பெரும் மாணவிகள் 10973 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர் மொத்தம் 20 ஆயிரத்து 618 பேர் மாவட்டத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர்

இது 94.39 சதவீதமாகும் கடந்த ஆண்டு தமிழக அளவில் தூத்துக்குடி மாவட்டம் பத்தாம் வகுப்பு தேர்வில் ஐந்தாம் இடம் பிடித்திருந்தது கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 95.58% ஆனால் இந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 9ஆம் இடம் பிடித்து பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது இது கல்வி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *