திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் கும்முடிப் பூண்டி தாலுக்க பூவலை கிராமத் தில் அருள்மிகு ஸ்ரீ பூஜை எல்லை அம்மன் திருக்கோவில் உள்ளது இக்கோயில் பழமை வாய்ந்த புகழ் பெற்ற கோயிலாகும் தற்போது இக்கோவிலானது பக்தர்களின் நிதி உதவியுடன் புணரமைக்கப் பட்டு காலை 6.00 மணிக்கு மேல் 7:30 மணிக்குள்ளாக மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதனையடுத்து கடந்த இரு தின ங்களாக எல்லையம்மனுக்கு பல் வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட் டன. இக்கோவிலில் வந்து வழிப் படும் பக்தர்கள் தங்களது வேண்டு தல் நிறைவேறுவதாகவும் மேலும் திருமண தடைகள் நீங்குவதாக வும் கூறப்படுகிறது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளான தலைவர் எஸ் மனோகர், துணைத் தலைவர் ஆர் மனோகரன், செயலாளர் கே சுரேஷ், பொருளாளர்எஸ் வடிவேல், இணைச் செயலாளர்கள் நாகராஜ், மனோகர், சேகர், யுவராஜ், தியாக ராஜன், கோபு, வேலு, சிவக்குமார், பாலசுப்பிரமணியன் மற்றும் விழா குழுவினரான விஜயகுமார், உள் ளிட்ட பலர் செய்திருந்தனர்.

கும்பாபிஷேக விழாவில் பல் வேறு பகுதிகளை சேர்ந்த ஏராள மான பொதுமக்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். விழாவிற்கு நிதி வழங்கிய பக்தர்களுக்கு சால்வை அணிவித்து கலசங்கள் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *