தென்காசியில் பொதிகை அறக்கட்டளை சார்பில் வட்டி இல்லா கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

தென்காசியில் செயல்பட்டு வரும் பொதிகை அறக்கட்டளை சார்பில் தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் வைத்து தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு வட்டி இல்லா கடன் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது

இந்த விழாவிற்கு பொதிகை அறக்கட்டளையின் நிறுவனர் எஸ் ஆர் கிருஷ்ணன் தலைமை தாங்கி வட்டி இல்லா கடன் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தென்காசி மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வட்டி இல்லா கடனுக்கு விண்ணப்பம் செய்து இருந்த நிலையில் அவர்களில் மாற்றுத்திறனாளி பெண் உள்ளிட்ட பத்து நபர்கள் ஆய்வு குழு மூலம் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு வட்டி இல்லா கடன் வழங்கப்பட்டது மீதம் உள்ள நபர்களுக்கு அடுத்தடுத்து தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படும் என அறக்கட்டளை நிறுவனர் கிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பொதிகை அறக்கட்டளை நிர்வாகிகள் ஈஸ்வரன், சேக் ஒலி, அகமது ரியாஸ், சுரேஷ், சூர்யா, நவ்ஃபீ, கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொதிகை அறக்கட்டளை நிறுவனர் எஸ்.ஆர்.கிருஷ்ணன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *